முன்மொழியப்பட்ட திட்டமானது முக்கியமாக இரண்டு புதிய குளங்களைக் கட்டுவதை உள்ளடக்கியது; அவையாவன வத்தேகெதர மற்றும் தொடங்கொல்ல அவற்றின்கொள்ளளகள் முறையே 1.30 MCM மற்றும் 2.40 MCM கொண்டவை ஆகும். தற்போதுள்ள ஹிம்பிலியகட குளத்தின் கொள்ளளவை 2.10 MCM இலிருந்து 2.46 MCM ஆக அதிகரிப்பது மற்றும் களுகங்கையில் இருந்து திட்டப் பகுதிக்கு நீரைத் திருப்பிவிட 1.8 km நீளமான சுரங்கப்பாதை அமைப்பதும் இதில் அடங்கும். அதுமட்டுமல்லாமல், சுரங்கப்பாதையின் கடைமடை அமைப்பிலிருந்து வத்தேகெதர மற்றும் ஹிம்பிலியகட குளங்கள் வரையிலான ஊட்டற் கால்வாய்கள் மற்றும் வத்தேகெதர, தொடங்கொல்ல குளங்களை இணைக்கும் இணைப்புக் கால்வாய்கள் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். அதுமட்டுமின்றி, மைலபிட்டிய வெவா மற்றும் அதன் நீரேந்தும் அமைப்புக்கு நீர்வழங்க துணை கால்வாய் ஒன்றும் அமைக்கப்படும். குறிப்பாக புதிய அபிவிருத்திப் பிரதேசங்களில் நீர்ப்பாசன முறைமையை நிர்மாணிக்கவும் தற்போதுள்ள நீர்ப்பாசன முறையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு புதிய குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு, ஹிம்பிலியகட குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன்மூலம் தற்போதுள்ள 1300 ஏக்கர் நிலங்களுக்கும் 1010 ஏக்கர் புதிய நிலங்களுக்கும் நீர்ப்பாசன வசதி கிடைக்கும். தற்போதுள்ள நிலங்களின் தற்போதைய பயிர் தீவிரம் 1.0 ஆனது 2.0 ஆக அதிகரிக்கப்படும் (இரு பருவங்களிலும் பயிரிடுதல்) மற்றும் புதிய நிலங்களின் பயிர் தீவிரம் இரண்டு பருவங்களிலும் மற்ற உணவு பயிர் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பயிர் தீவிரம் 2.0 ஆக பராமரிக்கப்படும்.

தொடர்புகளுக்கு

(பொறி.) டீ.எம்.டி.எஸ். திசாநாயக்க
பிரதம குடியுரிமை பொறியாளர் - HIIIP
பிரதம குடியுரிமை பொறியாளர் அலுவலகம்,
கங்கசிரிகம,
பெரகனாட்ட.
+94 663 142 077
+94 777 956 552
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பட தொகுப்பு